இந்தியா

தெரு நாய்களுக்கு கருத்தடை உத்தரவு..வலைக்குள் கட்டி வண்டியில் ஏற்றிய ஊழியர்கள்.. பரபரப்பான புதுச்சேரி

தந்தி டிவி

புதுச்சேரியில், தெரு நாய்களை அனுமதியின்றி பிடித்துச் செல்வதாக கூறி, சமூக ஆர்வலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பானது...

புதுச்சேரியில், தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அவை பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் பிடித்த இடத்திலேயே விட உழவர்கரை நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கடற்கரை சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை நகராட்சி ஊழியர்கள் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சமூக ஆர்வலகர்கள், நகராட்சி வாகனத்தின் சாவியை எடுத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து நகராட்சி ஊழியர்களுடன் அவர்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பானது. தகவல் அறிந்து வந்த போலீசார், சமூக ஆர்வலர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி