அதன்படி, நேற்று ராஜபக்சேவை சந்தித்த ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் 3 பேர், தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதேபோல, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடிவேல் சுரேஷ், அரவிந்த குமார் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே. இராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.