நாமக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தென்னை மட்டை, தேங்காய் பாலை ஆகியவை வயல்களில் தீயிட்டு எரிக்கப்பட்டு வந்தன.
ஆனால் தற்போது வீணாகும் தென்னை ஓலை, மட்டை ஆகியவற்றை இயந்திரத்தின் மூலம் அரைத்து அதை தென்னை மரத்துக்கு உரமாக பயப்படுத்தப்படுகிறது.
இந்த மரக்கழிவுகள் தென்னை மரத்தை சுற்றி பரப்பப்படும் போது மண்ணின் ஈரப்பதம் பல மாதங்களுக்கு தக்க வைக்கப்படுகிறது. இதனால் வறட்சி காலத்திலும் தென்னையில் பூ, பிஞ்சு உதிராமல் பாதுகாக்கப்பட்டு அதிக மகசூல் கிடைக்கிறது. தென்னையை தாக்கும் நோய்களும் கட்டுப்படுத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.