இந்தியா

ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை - வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், ஜூன் 3 முதல் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால், ஜூன் 3 முதல் காற்றுடன் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில், டவ்-தே, யாஸ் புயலை தொடர்ந்து ஜூன் 3 முதல் தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதால், அடுத்த 5 நாட்களுக்கு ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு, பத்தனம்திட்டா பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அணைகளின் நீர்மட்டத்தை கண்காணிக்கும் நிலையில், மின்சார வாரியமும் தயார் நிலையில் உள்ளது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?