பணியின்போது நீதிபதிகள் சிறைபிடிப்பு விவகாரத்தில் NIA விசாரணை மேற்கு வங்கத்தில் SIR பணியில் ஈடுபட்ட மாவட்ட நீதிபதிகள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம், தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளது. இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு, நீதிபதிகளை மிரட்டியது நீதித்துறைக்கு சவால்விடும் திட்டமிட்ட செயல் என்றும் கண்டனம் தெரிவித்தது. மேலும், மேற்கு வங்க அரசு கடமை தவறியதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றம், NIA அல்லது சிபிஐ விசாரணை அவசியம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, NIA அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்க உள்ளனர்.