இந்தியா

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஷப்னா சுரேஷ்

தந்தி டிவி

கேரளா மாநிலம திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஷப்னா சுரேஷ். இவர் அடிக்கடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பினராயி விஜயன் பினாமிகளின் பெயரில் வளைகுடா நாடுகளில் பல தொழில்கள் நடத்துவதாக கூறியுள்ளார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா, அஜ்மான் ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் தொழில்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனால்தான் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்கு பினராயி விஜயன் பயணம் செய்து வருவதாகவும், விரைவில் பினராயி விஜயன் தொடர்பான பல தகவல்களை வெளியிடுவேன் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை