இந்தியா

அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஷப்னா சுரேஷ்

தந்தி டிவி

கேரளா மாநிலம திருவனந்தபுரத்தில் உள்ள அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஷப்னா சுரேஷ். இவர் அடிக்கடி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பல்வேறு புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது மீண்டும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். பினராயி விஜயன் பினாமிகளின் பெயரில் வளைகுடா நாடுகளில் பல தொழில்கள் நடத்துவதாக கூறியுள்ளார். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகம், சார்ஜா, அஜ்மான் ஆகிய நாடுகளில் தான் அதிக அளவில் தொழில்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனால்தான் அடிக்கடி வளைகுடா நாடுகளுக்கு பினராயி விஜயன் பயணம் செய்து வருவதாகவும், விரைவில் பினராயி விஜயன் தொடர்பான பல தகவல்களை வெளியிடுவேன் என்றும் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ