இந்தியா

கேரளாவில் 8-ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக, படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி இன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், வருகிற 15-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகளும், சுகாதார பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்