இந்தியா

கேரளாவில் 8-ம் வகுப்புக்கு இன்று பள்ளிகள் திறப்பு

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. 9 மற்றும் 11 ம் வகுப்புகளுக்கு வருகிற 15-ம் தேதி பள்ளிகளைத் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக, படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த 1-ம் தேதி, ஒன்று முதல் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் அங்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், 8, 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி இன்று முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும், வருகிற 15-ம் தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மாநில கல்வித்துறை அதிகாரிகளும், சுகாதார பணியாளர்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி