இந்தியா

காற்றாலை மோசடி வழக்கில் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போகிறேன் - சரிதா நாயர்

காற்றாலை மோசடி வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக, நடிகை சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சரிதா நாயர் மீது காற்றாலை அமைத்து தருவதாக கூறி, மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, 6 வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நீதிபதி கண்ணன் தீர்ப்பளித்தார். அதில் சரிதா நாயர், அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி செய்த்து உறுதிபடுத்த பட்டு இருப்பதாகவும் இவர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார். மேலும் 3 பேருக்கும், 3 ஆண்டு சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, கோவை 6 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் உத்திரவிட்டார். இதனிடையே சரிதா நாயர் , பிஜூ ராதாகிருஷ்ணன் மேலாளர் ரவி ஆகிய 3 பேரும் தண்டணையை நிறுத்தி வைக்க கோரி நீதிபதியிடம் மனு அளித்ததை தொடர்ந்து மூன்று பேரின் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரிதா நாயர், தம்மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும், மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்