இந்தியா

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணலை சாப்பிட்ட மக்கள்

விருத்தாசலம் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணல் சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

விருத்தாசலம் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மணல் சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெற்றது. அங்குள்ள, மணவாளநல்லூர் பகுதியில் உள்ள மணிமுத்தாறு ஆற்றில் மணல் குவாரி அமைக்க அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அவர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும் வாழை இலையில் மணலை கொட்டி சாப்பிடும் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். அவர்களை தடுத்த அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்து கேட்ட பின்னர் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்