இந்தியா

சேலத்தில் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

சேலத்தில் மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது.

தந்தி டிவி

ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் நாராயணநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் முகமது ஆசாத் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். நேற்று முழுவதும் சிறுவனின் உடலை தேடும் பணி நடைபெற்று வந்தது. ஓடைக்கு வரும் நீரை மாற்றுப் பாதையில் திருப்பி விட்ட பின்னர் தேடும் பணி நடைபெற்றது. அப்போது கிச்சிபாளையம் கடுவாடு பாலம் பகுதியில் குப்பைகளுக்கு மத்தியில் இருந்து சிறுவன் முகமது ஆசாத்தின் சடலம் மீட்கப்பட்டது. 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் சடலம் குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு , மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை