இந்தியா

சேலத்தில் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

சேலத்தில் மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது.

தந்தி டிவி

ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

சேலத்தில் நேற்று முன்தினம் பெய்த கனமழையில் நாராயணநகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் முகமது ஆசாத் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்டார். நேற்று முழுவதும் சிறுவனின் உடலை தேடும் பணி நடைபெற்று வந்தது. ஓடைக்கு வரும் நீரை மாற்றுப் பாதையில் திருப்பி விட்ட பின்னர் தேடும் பணி நடைபெற்றது. அப்போது கிச்சிபாளையம் கடுவாடு பாலம் பகுதியில் குப்பைகளுக்கு மத்தியில் இருந்து சிறுவன் முகமது ஆசாத்தின் சடலம் மீட்கப்பட்டது. 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு சிறுவன் சடலம் குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு , மாவட்ட நிர்வாகம் சார்பில் 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்