இந்தியா

நடிகர் சைஃப் அலிகான் வழக்கில் திடீர் திருப்பம் - வசமாக சிக்கிய பெண்

தந்தி டிவி

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் வசித்து வந்த நடிகர் சைஃப் அலிகான் தாக்கப்பட்ட வழக்கில், வங்க தேசத்தை சேர்ந்த ஷரிஃபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்த நிலையில் குற்றவாளி ஷரிஃபுல் இஸ்லாம் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தை சேர்ந்த குக்குமோனி ஜஹாங்கீர் ஷேக் என்ற பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர் பெயரில் பதியப்பட்ட சிம்கார்டை ஷரிஃபுல் இஸ்லாம் பயன்படுத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த பெண்ணை கைது செய்துள்ள போலீசார், மும்பை அழைத்து வந்து அவரை விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை