பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீதான் கத்திக்குத்து சம்பவத்தில், மும்பை போலீசார் 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை பாந்த்ரா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். பாந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சைஃப் அலி கானை கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி கத்தியால் குத்திய சம்பவத்தில், ஷரிபுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கத்தி துண்டுகள் உட்பட தடயவியல் ஆதாரங்களுடன் மும்பை போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.