இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

தந்தி டிவி

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை, நேற்று திறக்கப்பட்டது. நடையை திறந்தவுடன் ஏராளமான பக்தர்கள் 18 படிக்கட்டுகளில் ஏறி, ஐயப்பனை தரிசித்தனர். இந்த நடையானது, வரும் 19ஆம் தேதி வரை திறந்திருக்கும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை ஆகிய பூஜைகள் அடுத்தடுத்து நடைபெறும். கடைசி நாளான 19ஆம் தேதி, அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30க்கு கோயில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு