இந்தியா

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

தந்தி டிவி

வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை, நேற்று திறக்கப்பட்டது. நடையை திறந்தவுடன் ஏராளமான பக்தர்கள் 18 படிக்கட்டுகளில் ஏறி, ஐயப்பனை தரிசித்தனர். இந்த நடையானது, வரும் 19ஆம் தேதி வரை திறந்திருக்கும். இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை ஆகிய பூஜைகள் அடுத்தடுத்து நடைபெறும். கடைசி நாளான 19ஆம் தேதி, அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30க்கு கோயில் நடை அடைக்கப்படும். வழக்கம் போல் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி