சபரிமலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் கற்பூர ஆழிபவனி நடைபெற்றது.
சபரிமலையில் மண்டல பூஜைக்கு முன்னோடியாக நடந்த இந்நிகழ்வில், தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் பங்கேற்றனர். தீப்பந்தங்கள் ஏந்தி, நாதஸ்வரம் மற்றும் முத்துக்குடையுடன், பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்த சிறார்கள் உள்ளிட்டோர் ஊர்வலமாகச் சென்றனர்.