சபரிமலை விவகாரத்தை கண்காணிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் சிரி ஜகன், ராமன் மற்றும் டி.ஜி.பி. ஹேமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த கண்காணிப்புக் குழு நிலக்கல்லில் நேரில் ஆய்வு செய்தனர். பக்தர்களின் தேவைக்காக செய்யப்பட்டுள்ள குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகளையும், போலீசார் தங்கி ஓய்வெடுக்கும் அறைகள் மற்றும் பேருந்து வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த குழு நாளை சபரிமலையில் ஆய்வு செய்ய உள்ளனர்.