இந்தியா

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்

தந்தி டிவி

சபரிமலைக்கு கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்த , கனகதுர்கா மீது, அவரது மாமியார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரத்தில்

உள்ள மாமியார் வீட்டிற்கு கனகதுர்கா சென்ற போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, அவரது மாமியார், கடுமையாக தாக்கியதாகவும், இதனால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினரிடம் கனகதுர்கா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பெருந்தலமன்னா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகதுர்காவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு