இந்தியா

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்

தந்தி டிவி

சபரிமலைக்கு கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்த , கனகதுர்கா மீது, அவரது மாமியார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரத்தில்

உள்ள மாமியார் வீட்டிற்கு கனகதுர்கா சென்ற போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, அவரது மாமியார், கடுமையாக தாக்கியதாகவும், இதனால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினரிடம் கனகதுர்கா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பெருந்தலமன்னா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகதுர்காவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை