இந்தியா

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த கனகதுர்கா மீது தாக்குதல் : மாமியார் மீது காவல்நிலையத்தில் புகார்

தந்தி டிவி

சபரிமலைக்கு கோவிலுக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்த , கனகதுர்கா மீது, அவரது மாமியார் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், மலப்புரத்தில்

உள்ள மாமியார் வீட்டிற்கு கனகதுர்கா சென்ற போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, அவரது மாமியார், கடுமையாக தாக்கியதாகவும், இதனால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினரிடம் கனகதுர்கா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பெருந்தலமன்னா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கனகதுர்காவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி