இந்தியா

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : "அரசியல் சாசன அமர்வு விசாரிக்கலாம்" - உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் புதிய கேள்விகளுடன் மறு ஆய்வு மனுவை பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்க முடியுமா என்பது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, உடன் ஆர். பானுமதி, அசோக் பூஷண், உள்ளிட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணைக்கு பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், மத சுதந்திரத்துக்கான நோக்கமும், எல்லையும் என்ன? மதத்தின் கட்டுப்பாடுகள் வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடைய விஷயமா? அரசியலமைப்பு சட்டம் 25 மற்றும் 26 பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ள மத ரீதியான உரிமைகள் என்ன? என்பது உள்ளிட்ட 7 கேள்விகளை, விசாரிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் சபரிமலை மறுஆய்வு மனு மீதான விசாரணை வரும் 17-ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

---

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்