இந்தியா

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் : "அரசியல் சாசன அமர்வு விசாரிக்கலாம்" - உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் புதிய கேள்விகளுடன் மறு ஆய்வு மனுவை பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்க முடியுமா என்பது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, உடன் ஆர். பானுமதி, அசோக் பூஷண், உள்ளிட்ட 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணைக்கு பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், மத சுதந்திரத்துக்கான நோக்கமும், எல்லையும் என்ன? மதத்தின் கட்டுப்பாடுகள் வழிபாட்டு முறைகளுடன் தொடர்புடைய விஷயமா? அரசியலமைப்பு சட்டம் 25 மற்றும் 26 பிரிவுகளில் கொடுக்கப்பட்டுள்ள மத ரீதியான உரிமைகள் என்ன? என்பது உள்ளிட்ட 7 கேள்விகளை, விசாரிக்கப் போவதாக உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. மேலும் சபரிமலை மறுஆய்வு மனு மீதான விசாரணை வரும் 17-ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

---

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்