இந்தியா

"சபரிமலை ஆபரணங்களை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான வழக்கு" - விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

சபரிமலை ஆபரணங்களை நிர்வகிப்பது யார் என்பது தொடர்பான வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு, ஆண்டுதோறும் பந்தளராஜா குடும்பத்தின் பாதுகாப்பில் உள்ள திருவாபரணம் எனப்படும் ஆபரணங்கள் அலங்கரிக்கப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு பிறகு ஆபரணங்கள் அனைத்தும் மீண்டும் பந்தளராஜா குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படும். ஆனால் இந்த ஆபரணங்கள் பாதுகாப்பு தொடர்பாக பந்தளராஜா குடும்பத்தில் பிரச்சினை எழுந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது. கடவுளுக்கு ஒருமுறை அளித்த ஆபரணங்கள் எப்படி தனி ஒரு குடும்பத்துக்கு சொந்தமாகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆபரணங்களை உரிமை கொண்டாடுவதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதுதொடர்பாக கேரள அரசிடம் ஆலோசனை பெற்று பதிலளிக்குமாறு மாநில வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தாவுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வெள்ளிக் கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்