இந்தியா

Sabarimala | Ayyappan | Train | ஐயப்ப பக்தர்களுக்கு ஓர் அறிவிப்பு - இனி இதை செய்தால் கடும் தண்டனை

தந்தி டிவி

ஐயப்ப பக்தர்கள் ரயிலுக்குள் கற்பூரம் ஏற்றுவதற்கு தெற்கு ரயில்வே முற்றிலும் தடை விதித்துள்ளது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்

ரயில் அல்லது ரயில் நிலைய வளாகத்திற்குள் கற்பூரம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டுமென தெற்கு ரயில்வே வலியுறுத்தியுள்ளது.

பக்தர்கள், சக பயணிகள் மற்றும் ரயில்வே சொத்துக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே வளாகத்தில் கற்பூரம், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, விளக்குகள் போன்றவற்றை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

மீறுவோர் ரயில்வே சட்ட விதிகளின் கீழ் தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என கூறப்பட்டுள்ளது.

அனைத்து ஐயப்ப பக்தர்களும் ரயில்வே ஊழியர்களுடன் ஒத்துழைப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை