சபரிமலை விமான நிலைய விவகாரம் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சபரிமலை விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பை கேரள உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு குறைந்த அளவு நிலம் கையகப்படுத்தும் வகையில் திட்டமிடுவதில் கேரள அரசு தோல்வி அடைந்துள்ளதாகவும் கேரள உயர்நீதிமன்றம் அரசை குறை கூறியுள்ளது. மேலும், விமான நிலையத்திற்கு தேவையான குறைந்தபட்ச நிலத்தை அடையாளம் காணவும் கேரளா அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது."