சபரிமலை வழக்கு - தந்திரிக்கு ஆதரவாக கொந்தளித்த காங்., சபரிமலை தங்க திருட்டு வழக்கில் தந்திரி கண்டரரு ராஜீவருக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லாத நிலையில் அவரை எவ்வாறு சிறையில் அடைத்திருக்க முடியும்? என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. சமீபத்தில் சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் கைதாகி 41 நாள் சிறையில் அடக்கப்பட்டிருந்த தந்திரி கண்டரரு ராஜீவ ஜாமீனில் வெளியான நிலையில், அவருக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லை என நீதிமன்றம் கூறியது கேரள மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஐயப்பனின் பிரதிநிதியான தந்திரியை எவ்வாறு கைது செய்தனர் என்று கேள்வி எழுப்பியுள்ள கேரளா காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கேரள முதலமைச்சரின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், இதில் கேரள முதலமைச்சர் அலுவலகத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.