இந்தியா

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி - மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த, மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

தந்தி டிவி

ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த, மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது. இந்நிலையில், அந்த நிறுவனம் இந்தியாவில் ஸ்புட்னிக்கை பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது. மத்திய அரசின் நிபுணர் குழு இது குறித்து ஆலோசித்தது. இதன் அடிப்படையில், ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையின் மீது இந்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் விரைவில் ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்