இந்தியா

செம்மரக் கடத்தல் : 7 பேர் கைது 4 பேருக்கு வலை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராஜம்பேட்டை வனப்பகுதியில் கடந்த 19ஆம் தேதி செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக, தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர். ராஜம்பேட்டை வன அலுவலகத்தில் விசாரணைக்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த அவர்கள், ஜன்னல் கம்பியை உடைத்து தப்பினர். இதையடுத்து அவர்கள் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், ராஜம்பேட்டை வனப்பகுதிகளில் பதுங்கியிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பிடிபட்டவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 47 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிக்கிய 7 பேரும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?