இந்தியா

4 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்! தொடர் மழையால் கதறும் வட மாநிலங்கள் - வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை

தந்தி டிவி

இந்தியாவில் வடக்கு முதல் தெற்கு வரை பல்வேறு மாநிலங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், நான்கு மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது

கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திரா பிரதேசத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய மாநில ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட், புனே, சதாரா மற்றும் ரத்னகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மும்பை மாநகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த நான்கு முதல் ஆறு நாட்களுக்கு டெல்லியில் பலத்த மழை இருக்கும் என்றும், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளியன்று அருணாச்சலப் பிரதேசம், மேகாலயா மற்றும் அசாமில் கன மழை பெய்ய கூடுமென இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை