இந்தியா

"வேளாண் சட்டத்தை நிறுத்தி வைக்க தயார்" - மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லியில் உள்ள விக்யான் பவனில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.

தந்தி டிவி

டெல்லியில் உள்ள விக்யான் பவனில், மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில், விவசாயிகள் பிரதிநிதிகள் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதிகள் 10ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஏற்கனவே 9 முறை நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், தற்போது 10ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின் போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயார் என மத்திய அமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார். போராட்டத்தை கைவிடுவது குறித்து உடனே முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்நிலையில், மீண்டும் வரும் 22ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும், அமைச்சரின் ஆலோசனை குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்