இந்தியா

"வங்கிகளில் கடன் வாங்கியோர் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம்"

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வங்கிகளில் கடன் வாங்கியோர், மாதத் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் நாடே முடங்கியுள்ள நிலையில், பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறினார்.

பொருளாதார பின்னடைவை சரி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிகம் 5 புள்ளி 15லிருந்து நான்கு புள்ளி நான்கு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

வங்கிக்கான ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த அறிவிப்பால், தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS