இந்தியா

"வங்கிகளில் கடன் வாங்கியோர் தவணை செலுத்த 3 மாதம் அவகாசம்"

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, வங்கிகளில் கடன் வாங்கியோர், மாதத் தவணை செலுத்த மூன்று மாதம் கால அவகாசம் வழங்கி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பால் நாடே முடங்கியுள்ள நிலையில், பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை தொடர்ந்து கவனித்து வருவதாக கூறினார்.

பொருளாதார பின்னடைவை சரி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிகம் 5 புள்ளி 15லிருந்து நான்கு புள்ளி நான்கு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

வங்கிக்கான ரிவர்ஸ் ரெப்போ 4.9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த அறிவிப்பால், தொழில் நிறுவனங்கள், வங்கி வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி