இந்தியா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தந்தி டிவி
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம், விரால் ஆச்சர்யா பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிவதற்கு 6 மாதங்கள் உள்ள நிலையில் அவர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சர்யா நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், தமது பதவியை ராஜினாமா செய்தபோதே , விரால் ஆச்சர்யாவும் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்