இந்தியா

ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரால் ஆச்சாரியா ராஜினாமா

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தந்தி டிவி
ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் 4 துணை ஆளுநர்களில் ஒருவராக, 2017-ம் ஆண்டு ஜூன் மாதம், விரால் ஆச்சர்யா பொறுப்பேற்றார். பதவிக் காலம் முடிவதற்கு 6 மாதங்கள் உள்ள நிலையில் அவர், தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரால் ஆச்சர்யா நியூயார்க்கில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கல்விப்பணியில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம், ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், தமது பதவியை ராஜினாமா செய்தபோதே , விரால் ஆச்சர்யாவும் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ