இந்தியா

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று ஆரம்பம் - இந்தியா, வெளிநாடுகளில் இருந்து குவிந்த பக்தர்கள்

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரை இன்று தொடங்குவதையொட்டி, ஒடிஷாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

தந்தி டிவி

ஒடிஷா மாநிலம் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாத வளர்பிறையின் இரண்டாவது நாளில் ரத யாத்திரை தொடங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டின் ரத யாத்திரை இன்று தொடங்குகிறது. இதற்காக, 16 சக்கரங்கள் கொண்ட ஜெகந்நாதர் ரதம், 12 சக்கரங்கள் கொண்ட சுபத்ரா ரதம், 14 சக்கரங்களை கொண்ட பாலபத்திரர் ரதம் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. ரத யாத்திரையையொட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் புரியில் குவிந்துள்ளனர். ரதங்கள் செல்லும் வழி நெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, புரி ஜெகந்நாதர் கோவிலுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று இரவு சென்றார். ரத யாத்திரை தொடங்க உள்ள நிலையில், அவர் சாமி தரிசனம் செய்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்