இந்தியா

பாக். வான் வழியே செல்ல இந்திய குடியரசுத்தலைவருக்கு தடை

பாகிஸ்தான் வான் வழியாக இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

தந்தி டிவி
பாகிஸ்தான் வான் வழியாக, இந்திய விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலமாக, பாகிஸ்தான் வான் வழியாக செல்ல, இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. வரும் திங்கட்கிழமை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், சுவிட்சர்லாந்து மற்றும் ஐ​ஸ்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின், வான் வழியே, பயணிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார். இதனை, ஏ.எஃப்.பி. ஊடகம் உறுதி செய்து, செய்தி வெளியிட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ