இந்தியா

12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து - கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்

மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உலகின் மிகப்பெரிய ஜனநாயக கல்வி அமைப்பில், 33 கோடி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலமே தங்களின் பிரதான முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மிகநீண்ட ஆலோசனை நடத்தப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைக்கு பிறகு, உரிய முடிவை எடுப்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறப்பம்சம் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கலந்துரையாடல் இது என தெரிவித்துள்ள அமைச்சர், மாணவர்களின் உடல்நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே