இந்தியா

12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து - கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் விளக்கம்

மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே சி.பி.எஸ்.இ. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதாக, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

உலகின் மிகப்பெரிய ஜனநாயக கல்வி அமைப்பில், 33 கோடி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பிரகாசமான எதிர்காலமே தங்களின் பிரதான முன்னுரிமை என தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள், செயலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் மிகநீண்ட ஆலோசனை நடத்தப்பட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான கலந்தாலோசனைக்கு பிறகு, உரிய முடிவை எடுப்பது பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சிறப்பம்சம் என குறிப்பிட்டுள்ளார்.

தேர்வு தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் நடத்தப்பட்ட உலகின் மிகப்பெரிய கலந்துரையாடல் இது என தெரிவித்துள்ள அமைச்சர், மாணவர்களின் உடல்நலன் மற்றும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்குப் பார்வையுடன் தேர்வு ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு