ரயில்களில் உள்ள ஏசி வகுப்புகளின் கட்டணத்தை கடந்த 12 ஆண்டுகளாக ஏன் உயர்த்தவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ள, மத்திய கணக்கு தணிக்கை குழு, ஏசி வகுப்புகளில் கொடுக்கப்படும் போர்வை போன்றவற்றின் கட்டணத்தை அதிகரிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளது. இதனால், ரயில்களில் ஏசி வகுப்புகளுகான பயணச்சீட்டின் விலை அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.