இந்தியா

காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்

புதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து பட்டுகோட்டை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி முடிவடைந்ததை அடுத்து, இன்று முதல் அந்த பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. வாரத்தில், திங்கள் மற்றும் வியாழன் அன்று மட்டும் இயக்கப்படும் இந்த ரயில் கண்டனூர், புதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்தால் 3 மணி நேரம் ஆக கூடிய நிலையில், ரயிலில் ஆறரை மணி நேரம் ஆகும் என்பதால், இந்த பயண நேரத்தை குறைத்து தினமும் ரயிலை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு