இந்தியா

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார். 95 சதவீத ரயில்களை ரயில்வே துறையே தொடர்ந்து இயக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பெரும்பாலானா ரயில் பெட்டிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான நிறுவனங்கள் போல கட்டணத்தை, தனியாக ரயில்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார். வரும் 2023 ஆம் ஆண்டு வாக்கில் தான் தனியார் ரயில் இயக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம் என்றும், தனியார் ரயில்களின் செயல்திறனைக் கண்காணிக்க ஒரு வழிமுறை உருவாக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்