இந்தியா

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார். 95 சதவீத ரயில்களை ரயில்வே துறையே தொடர்ந்து இயக்கும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பெரும்பாலானா ரயில் பெட்டிகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நிலையில், தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் விமான நிறுவனங்கள் போல கட்டணத்தை, தனியாக ரயில்களை இயக்க விரும்பும் நிறுவனங்கள் நிர்ணயம் செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார். வரும் 2023 ஆம் ஆண்டு வாக்கில் தான் தனியார் ரயில் இயக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம் என்றும், தனியார் ரயில்களின் செயல்திறனைக் கண்காணிக்க ஒரு வழிமுறை உருவாக்கப்படும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்