இந்தியா

ரபேல் விவகாரம் - வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி

ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என விமர்சித்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.

தந்தி டிவி

* ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாகவும், இதனால் பிரதமர் மோடி காவலாளி அல்ல, திருடன் எனவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதனைக் கண்டித்து, உச்சநீதிமன்றத்தில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கில், ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

* இதுதொடர்பாக ராகுல் விளக்கம் அளிக்கக்கோரி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், வழக்கு இன்று மீ்ண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

* அதில், தேர்தல் பிரசாரம் உச்சநிலையில் இருக்கும்போது அவ்வாறு பேசியதாகவும், இதற்கு தான் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், எதிர்காலத்தில் இதுபோல் பேசமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி