இந்தியா

ரபேல் ஒப்பந்தம் - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

ரபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது தொடர்பான தகவல்களை வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தந்தி டிவி

ரபேல் ஒப்பந்த‌த்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், ரபேல் விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் இறுதி செய்த‌து தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு உச்ச நீமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ரபேல் விவகாரத்தில், சில ரகசிய தகவல்கள் அடங்கி இருப்பதால், முழு தகவல்களை வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதனை தொடர்ந்து, வெளியிட முடிந்த தகவல்களை வெளியிடவும், வெளியிட முடியாத தகவல்களுக்கு, தகுந்த காரணங்களை எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் சம‌ர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை நீதிபதிகள் நவம்பர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்