புதுச்சேரி அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. செடல் உற்சவ விழா நிகழ்ச்சியில் கிரேன், பொக்லைன், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்டவற்றில் பக்தர்கள் அலகு குத்தி தொங்கியபடி ஊர்வலமாக வந்தனர். இதில் முருகபெருமான் தலைக்கவசம் அணிந்து புல்லட் பைக்கில் அமர்ந்தபடி வீதியுலா வந்தது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.