இந்தியா

புதுச்சேரியில் துப்பாக்கி முனையில் பண பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையை சேர்ந்த சிவா என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அனிச்சங்குப்பம் பகுதியில் அவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கெளதம், ஜெயபிரகாஷ், பிரகாஷ் ஆகியோர் தங்களை போலீஸ் என கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 செல்போன் மற்றும் 750 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் கெளதம், ஜெயபிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆன்லைன் மூலமாக துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்ததால் தீவிர விசாரணை நடக்கிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்