இந்தியா

புதுச்சேரியில் துப்பாக்கி முனையில் பண பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறித்த மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

சென்னையை சேர்ந்த சிவா என்பவர் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அனிச்சங்குப்பம் பகுதியில் அவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்து கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த கெளதம், ஜெயபிரகாஷ், பிரகாஷ் ஆகியோர் தங்களை போலீஸ் என கூறி துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 செல்போன் மற்றும் 750 ரூபாயை பறித்து சென்றுள்ளனர். புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் கெளதம், ஜெயபிரகாஷ், பிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஆன்லைன் மூலமாக துப்பாக்கி வாங்கியதாக தெரிவித்ததால் தீவிர விசாரணை நடக்கிறது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்