புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.5000 வரவு புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு 5000 ரூபாய் உதவித்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை 2,000 ரூபாயில் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டிருந்தது. சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான தொகை சேர்த்து 5,000 ரூபாய் முன்கூட்டியே வழங்கப்படுகிறது. சுமார் 63 ஆயிரம் குடும்பத் தலைவிகளுக்கு தலா 5,000 ரூபாய் வழங்கப்படுவதுடன், இதற்காக 31 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி செலவிடப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது.