இந்தியா

"வளர்ச்சி வேண்டும் என்றால் என்னை பற்றி விமர்சிக்காதீர்கள்" - புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில்

புதுச்சேரி, முன்னேற்றம் அடைய வேண்டும் என விரும்பினால் தன்னைப் பற்றி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சிக்கக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி முதலமைச்சர் நராயணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அதிகார மோதல் நிலவி வரும் நிலையில், கிரண்பேடி தன்னிச்சையாக பிறப்பிக்கும் உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றத் தேவையில்லை என நாராயணசாமி கூறியிருந்தார். இந்த நிலையில், நாராயணசாமிக்கு பதில் அளிக்கும் விதமாக, வாட்ஸ் ஆப்பில் பதிவிட்டுள்ள கிரண்பேடி, ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து, எதிர்மறையான கருத்துக்களை கூறுவதால், புதுச்சேரியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். பொறுப்புள்ள முதலமைச்சராக இருக்கும் நாராயணசாமிக்கு, புதுச்சேரியில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால், அவர் ஆளுநரின் அதிகாரம் பற்றி விமர்சனம் செய்திருக்க கூடாது எனவும் கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்