இந்தியா

"வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும்" - அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புதுச்சேரி அருகே உள்ள அரிக்கமேடு பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய அரிக்கமேடு பகுதியில் 1937-ஆம் ஆண்டு ழுவோ துய்ப்ரேய் என்ற பிரெஞ்ச் பேராசிரியர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரோமானிய கால மட்பாண்டங்கள், நாணயங்கள் உள்ளிட்டவற்றை கண்டுபிடித்து அவர் சேகரித்தார். சுமார் 2300ஆண்டுகளுக்கு முன்பு ரோமானியர்களின் வணிக பகுதியாக அரிக்கமேடு திகழ்ந்ததாக கூறப்படுகிறது. கீழடி போன்று வரலாற்று சிறப்பு மிக்க அரிக்கமேடு பகுதியில் மத்திய, மாநில அரசுகள் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வரலாற்று சின்னங்களை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு