இந்தியா

மருத்துவம் சேர்ந்த புதுச்சேரி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த மாணவி நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். புதுச்சேரி திம்மநாயக்கன் பாளையம் பகுதியை சார்ந்த சங்கர் என்பவரின் மகள் சினேகபிரியா, அங்குள்ள திருவள்ளுவர் அரசு பெண்கள் பள்ளியில் படித்து 520 மதிப்பெண் பெற்றதோடு, நீட் தேர்விலும் 279 மதிப்பெண்களை பெற்றார். இதையடுத்து, புதுச்சேரி அரசு இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில், மாணவி சினேகபிரியாவுக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச சென்டாக் மாணவர்கள் பெற்றோர்கள் நல சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அப்போது, அவருக்கு மருத்துவ படிப்பிற்கான உபகரணங்கள் மற்றும் உடைகள் வழங்கப்பட்டன.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா