இந்தியா

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாராயணசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மருத்துவக் குழுக்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை, அவர் பிறப்பித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, புதுச்சேரியில் கொரோனா பாதிப்பிற்கு, சிகிச்சை அளிக்க, அரசு மருத்துவமனை, ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜிப்மரில் திறக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் 2 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த முடிவுகளை அறியலாம் என்றும் வெளிநாட்டு பயணிகள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே, புதுச்சேரிக்குள் அனுமதிக்கப் படுவதாகவும் கூறினார்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு