இந்தியா

புதுச்சேரி முதலமைச்சர், சபாநாயகர் வீடுகளை முற்றுகையிட முயன்ற பா.ஜ.கவினர் கைது

பா.ஜ.க நியமன எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் அனுமதி மறுப்பு காரணமாக முற்றுகை முயற்சி

தந்தி டிவி

புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு பா.ஜ.க சார்பில் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ-க்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஓராண்டாக அவர்களுக்கு சட்டமன்றத்தில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், நியமன உறுப்பினர்கள் அவைக்குள் அனுமதிக்க உத்தரவிட்டும் தொடர்ந்து மறுத்து வருகிறது புதுச்சேரி மாநில அரசு.இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் வீடுகளை முற்றுகையிட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கடும் வாக்குவாதங்களுக்கு பிறகு போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"