இந்தியா

ஆரோவில் அருகே 16 பேர் கைது : முந்திரி தோப்பில் கஞ்சா, மது போதையுடன் விருந்து

புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குப்பம் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பான வகையில் மது விருந்து ஏற்பாடு செய்த 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
புதுச்சேரி அருகே, விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆலங்குப்பம் கிராமத்தில் சட்டத்துக்கு புறம்பான வகையில் மது விருந்து ஏற்பாடு செய்த 16 பேரை போலீசார் கைது செய்தனர். அங்குள்ள ராயப்பேட்டை என்ற இடத்தில், நள்ளிரவு நேரத்தில் "டிஜே" நடன இசையுடன் மதுபான விருந்து நடப்பதாக ஆரோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்ற போலீசார் அனுமதியின்றி மதுபான விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த யுவராஜ், முந்திரி தோப்பு உரிமையாளர் பலராமன் உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 300 கிராம் போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின் வெளிநாட்டவர்கள், வெளிமாநிலத்தவர் உள்பட 100க்கும் மேற்பட்டவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு