இந்தியா

புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.

தந்தி டிவி
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோயில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கோயிலின் ஆடித்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மாநில முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு