இந்தியா

புதுச்சேரியில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா - சிறுவனின் தந்தைக்கு ஏற்கனவே பாதிப்பு உறுதி

புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஜிப்மர் மற்றும் கதிர்காமம் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இருந்து திரும்பிய பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதே போன்று, வில்லியனூரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் உட்பட மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவனின் தந்தை ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.


BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை