இந்தியா

நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.

தந்தி டிவி

பூமி கண்காணிப்பு செயற்கைகோளுடன், பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ நிறுவனம் பூமியைக் கண்காணிப்பதற்காக 'ரீசாட்-2 பி.ஆர்-1' என்ற செயற்கைகோளை தயாரித்து உள்ளது. இந்த செயற்கை கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம், நாளை மாலை 3.25 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து, 'கவுன்ட் டவுன்' இன்று தொடங்குகிறது. இஸ்ரேல், ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த செயற்கைகோள்களும் இந்த ராக்கெட்டில் விண்ணுக்கு அனுப்பப்படுகின்றன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்