யோகாசனங்கள் செய்து அசத்திய சிறை கைதிகள்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மத்திய சிறையில் பல்வேறு யோகாசனங்களை செய்து அசத்திய சிறை கைதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ள நிலையில் அவர்களுக்கு நாள்தோறும் காலையில் யோகாசன பயிற்சி அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.