இந்தியா

"அயோத்தி தீர்ப்பை நாட்டு மக்கள் ஏற்றுள்ளனர்" - மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி வழக்கின் தீர்ப்பை நாட்டில் உள்ள 130 கோடி மக்களும் பெருமிதத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

தந்தி டிவி

மன் கீ பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அயோத்தி தீர்ப்பு நீதித் துறையின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றார். இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு என்ற அவர் பாரதியாரின் முப்பது கோடி முகமுடையாள் கவிதையை மேற்கொள் காட்டி நமது நாட்டுக்கு பல முகங்கள் பல மொழிகள் இருந்தாலும் அனைத்து மக்களின் சிந்தனையும் ஒன்றே எனக் கூறினார். வரும் 26ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பு நிறுவப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இது மிகவும் சிறப்பான தருணம் என்று பிரதமர் பெருமிதமாக கூறினார். இதனிடையே, பள்ளிகள் தோறும் மாணவர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் விளையாட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"