இந்தியா

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது.

தந்தி டிவி

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் வண்ணமிகு விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரணாப் முகர்ஜிக்கு விருதை வழங்குகிறார். பாரத ரத்னா விருது பெறும் ஐந்தாவது முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. பிரணாப்முகர்ஜி தவிர, இறப்புக்கு பின்னான பாரத ரத்னா விருது சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாமிய மொழி பாடகர் பூபேன் ஹசாரிகாவுக்கும் வழங்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு