இந்தியா

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது.

தந்தி டிவி

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வழங்கப்படுகிறது. குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் வண்ணமிகு விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரணாப் முகர்ஜிக்கு விருதை வழங்குகிறார். பாரத ரத்னா விருது பெறும் ஐந்தாவது முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி. பிரணாப்முகர்ஜி தவிர, இறப்புக்கு பின்னான பாரத ரத்னா விருது சமூக செயற்பாட்டாளர் நானாஜி தேஷ்முக் மற்றும் அசாமிய மொழி பாடகர் பூபேன் ஹசாரிகாவுக்கும் வழங்கப்பட உள்ளது. கடந்த ஜனவரி 25 ஆம் தேதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட 3 பேருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ